Home > DISTRICT-NEWS, Tiruvannamalai > திருவண்ணாமலையில் காலாவதியான குளிர்பானங்கள் அழிப்பு

திருவண்ணாமலையில் காலாவதியான குளிர்பானங்கள் அழிப்பு

9,September, 2014

திருவண்ணாமலை, : திருவண்ணாமலையில் உள்ள கடைகளில் காலாவதியான குளிர்பானங்கள், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
அதைத்தொடர்ந்து திருவண்ணாமலை நகர உணவு பாதுகாப்பு அலுவலர் கலைஷ்குமார் தலைமையிலான குழுவினர் நேற்று திருவண்ணா மலை பஸ் நிலையம், பெரியார் சிலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது காலாவதியான குளிர்பானங்கள், தண்ணீர் பாக்கெட்டுகள், பிஸ்கட் பாக்கெட்டுகள், மோர், சிப்ஸ் பாக்கெட்டுகள், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட் களை கைப்பற்றி அழித்தனர்.அழிக்கப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூ.40 ஆயிரம் ஆகும்.

  1. 9,September, 2014 at 7:36 pm

    Suppliers network should also be cracked down.

  1. No trackbacks yet.
Comments are closed.