Home > DISTRICT-NEWS, Erode > இப்படியும் திருட்டு நடக்குமா? வியாபாரி புகாரால் ‘திக்’

இப்படியும் திருட்டு நடக்குமா? வியாபாரி புகாரால் ‘திக்’

9,July, 2021

அந்தியூர்: அந்தியூர் அருகே, மளிகை கடை வியாபாரி கொடுத்த புகார், போலீசாரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அந்தியூரை அடுத்த ஆலாம்பாளையத்தில், ஒரு மளிகை கடை உள்ளது. நேற்று முன்தினம் கடைக்கு மொபட்டில் வந்த ஆசாமி, உணவு பாதுகாப்பு துறை அதிகாரி என்று, உரிமையாளரிடம் கூறினாராம். கடையில் ஹான்ஸ் பாக்கெட் உள்ளதா? என சோதனை செய்த அவர், வீட்டுக்குள்ளும் சென்று சோதனை செய்தாராம். பீரோவை திறக்க சொல்லி, ஆறு பவுன் தங்க நகையை எடுத்துச் சென்று விட்டதாக, வெள்ளித் திருப்பூர் போலீசில், கடை உரிமையாளர் புகாரளித்துள்ளார். நிஜமா? கதையா? என தெரியாமல், போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Categories: DISTRICT-NEWS, Erode