Home > DISTRICT-NEWS, Kanniyakumari > நாகர்கோவில் கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு

நாகர்கோவில் கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு

10,September, 2014

நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கடைகளில் திடீர் சோதனை நடத்தினர்.

குமரி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சாலோடீசன் தலைமையில் அலுவலர்கள் சங்கரநாராயணன், முருகேசன், அய்யப்பன் ஆகியோர் நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் உள்ள ஹோட்டல்கள், இனிப்புக் கடைகள், பழக்கடைகள் உள்ளிட்ட கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் சுகாதாரமற்ற உணவுப் பொருள்கள், இனிப்பு வகைகள், அழுகிய பழங்கள் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து, அவற்றை அழித்தனர்.