Home > DISTRICT-NEWS, Villupuram > வானூர், கோட்டகுப்பம் பகுதியில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை

வானூர், கோட்டகுப்பம் பகுதியில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை

16,September, 2014

விழுப்புரம் மாவட்டம் வானூர் மற்றும் கோட்டகுப்பம் பகுதியில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை திடீர் சோதனை நடத்தினர். இச் சோதனையில் கைப்பற்றப்பட்ட காலாவதியான பொருள்கள் மற்றும் புகையிலை பொருள்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தி அழித்தனர்.

விழுப்புரம் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள், வானூர் வட்ட அதிகாரிகள் ஆகியோர் இணைந்து விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலம் கூட்டுச் சாலை, வானூர், கோட்டகுப்பம் உள்ளிட்ட பகுதிகளில் திடீர் சோதனை நடத்தினர். இச் சோதனையில் விற்பனை தேதி தவறிய எண்ணெய் பாக்கெட்டுகள், சமையல் பொருள்கள், மற்றும் தடையை மீறி விற்பனை செய்யப்ட்ட புகையிலை பொருள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களை அனைத்தையும் திருச்சிற்றம்பலம் கூட்டுச் சாலையில் போட்டு அழித்தனர். மேலும் கடையின் உரிமையாளர்களிடம் தொடர்ந்து விற்பனை தேதி தவறிய பொருள்கள் விற்பனை செய்யப்பட்டால் கடையின் உரிமம் ரத்தாகும் என்றும் அவர்கள் எச்சரித்தனர்.

Categories: DISTRICT-NEWS, Villupuram