Home > DISTRICT-NEWS, Salem > அதிகாரிக்கு கொலை மிரட்டல் நுகர்வோர் கழகம் ஆர்ப்பாட்டம்

அதிகாரிக்கு கொலை மிரட்டல் நுகர்வோர் கழகம் ஆர்ப்பாட்டம்

25,September, 2014

சேலம்: சேலத்தில், உணவு பாதுகாப்பு அலுவலருக்கு, கொலை மிரட்டல் விடுத்ததை கண்டித்து, நேற்று மனித உரிமைகள் நுகர்வோர் கழகம் சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது. சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலராக பணியாற்றி வருபவர் அனுராதா. சமீபத்தில், இவர் பல இடங்களில் ஜவ்வரிசி, குளிர்பானங்கள் போன்ற பொருட்களில் கலப்படம் செய்வதை கண்டிக்கும் வகையில், ஆய்வு மேற்கொண்டார். தவிர, போதை வஸ்து பொருட்களையும் பறிமுதல் செய்தார். இவரது செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், சமீபத்தில் ஒரு மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டது. சேலம் பழைய நாட்டாண்மை கழக கட்டிடம் முன்பு, நேற்று உலகளாவிய மனித உரிமைகள் நுகர்வோர் கழகம் சார்பில், மிரட்டல் கடிதம் விடுத்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து, ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில், 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Categories: DISTRICT-NEWS, Salem