Home > Cuddalore, DISTRICT-NEWS > கடலூரில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பறிமுதல்

கடலூரில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பறிமுதல்

14,October, 2014

கடலூர்: கடலூரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த போதை பொருட்களை போலீசார் கைப்பற்றினர். கடலூர், திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் உள்ள குடோனில், அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்களின் பாக்கெட்டுகள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் கடலூர் ரவுடி ஒழிப்பு இன்ஸ்பெக்டர் ஜெரால்டு ராபின்சன், ஏட்டு ஜான்பீட்டர் மற்றும் போலீசார் திருப்பாதிரிப்புலியூர் கிருஷ்ணன் தெருவில் உள்ள பண்ருட்டியைச் சேர்ந்த பாரதி (30) என்பவருக்கு சொந்தமான குடோனில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அதில், 8 மூட்டைகள் ஹான்ஸ் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. அவற்றை கைப்பற்றி மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ராஜாவிடம் ஓப்படைக் கப்பட்டது. கைப்பற்றப்பட்ட பொருட்கள் பரிசோதனைக் கூடத்திற்கு அனுப்பட்டு, போதை பொருட்கள் தான் என தெரிய வந்தால் குடோன் உரிமையாளர் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள் ளப்படும், தொடர்ந்து இதுபோன்ற நடவடிக்கை களில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டம் பாயும் என தெரிவித்தார்.

Categories: Cuddalore, DISTRICT-NEWS