Home > DISTRICT-NEWS, Pudukkottai > ஆலங்குடி, வடகாட்டில் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

ஆலங்குடி, வடகாட்டில் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

8,November, 2014

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி, வடகாட்டில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் மற்றும் காலாவதியான உணவுப் பொருள்களை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர்.

மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் ஜி. வரலெட்சுமி தலைமையில் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் எஸ். ஜேம்ஸ், எஸ். ஆறுமுகம் உள்ளிட்ட அதிகாரிகள் ஆலங்குடி, வடகாடு பகுதியில் உள்ள கடைகளில் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த தடைசெய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் மற்றும் காலாவதியான உணவுப் பொருள்கள் என ரூ. 15 ஆயிரம் மதிப்புள்ள பொருள்களைப் பறிமுதல் செய்தனர்.

Categories: DISTRICT-NEWS, Pudukkottai