Home > Cuddalore, DISTRICT-NEWS > நுகர்வோர் உரிமை தினம்: கலெக்டர் பரிசளிப்பு

நுகர்வோர் உரிமை தினம்: கலெக்டர் பரிசளிப்பு

9,November, 2014

New Doc 1_1

கடலூர் : கடலூரில், நடைபெற்ற உலக நுகர்வோர் உரிமை தின விழாவில், பள்ளி, கல்லூரி அணிகளுக்கு கலெக்டர் பரிசு வழங்கினார்.
ஐ.நா., அறிவுறுத்தலின்படி நவம்பர் 7ம் தேதி உலக நுகர்வோர் உரிமை தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கடலூர் டவுன்ஹாலில் நடந்த விழாவிற்கு மாவட்ட வழங்கல் அலுவலர் தங்கவேலு வரவேற்றார். தலைமை தாங்கிய கலெக்டர் சுரேஷ்குமார் கல்லூரி குடிமக்கள் நுகர்வோர் மன்றம் மற்றும் பள்ளி மாணவர் நுகர்வோர் மன்றங்கள் என தலா மூன்று மன்றங்களுக்கு பரிசு வழங்கினார்.விழாவில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ரேணுகாம்பாள், ஆர்.டி.ஓ., ஷர்மிளா, துணை பதிவாளர் கமலக்கண்ணன், நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் மணி, தொழிலாளர் ஆய்வாளர் ஜெய்சங்கர், உணவு பாதுகாப்பு அலுவலர் ராஜா உள்ளிட்டோர் பேசினர்.மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளர் எழிலன் நன்றி கூறினார்.

Categories: Cuddalore, DISTRICT-NEWS