Home > DISTRICT-NEWS, Namakkal > விடுதி ஊழியருக்கு எச்சரிக்கை விடுப்பு

விடுதி ஊழியருக்கு எச்சரிக்கை விடுப்பு

9,November, 2014

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தலைமையிலான குழுவினர், முள்ளுக்குறிச்சி பிற்படுத்தப்பட்டோர் நல விடுதியை, திடீர் ஆய்வு செய்து, அங்கே பணியாற்றும் ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்து வந்தனர்.ராசிபுரம் அடுத்த முள்ளுக்குறிச்சி பிற்படுத்தப்பட்டோர் நல மாணவியர் விடுதியை, மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தமிழ்ச்செல்வன் தலைமையிலான குழுவினர், திடீர் தணிக்கை செய்தனர். அதில், மாணவியருக்கு தயாரிக்கப்படும் சாம்பார் மற்றும் உணவு பொருட்கள் தரமற்று வழங்குவது கண்டறியப்பட்டது.முன்னாதாக, வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர், தரமற்ற உணவை இரவு நேரங்களில் சாப்பிடமாமல் இருந்ததால், அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு, முள்ளுக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதனால், அங்கு பணியாற்றும் ஊழியர்களை, அதிகாரிகள் எச்சரித்து, தரமான உணவு தயாரித்து வழங்க அறிவுறுத்திவிட்டுச் சென்றனர்.

Categories: DISTRICT-NEWS, Namakkal