Home > Cuddalore, DISTRICT-NEWS > உணவு பாதுகாப்பு அதிகாரி ஐஸ் பேக்டரிகளில் ஆய்வு

உணவு பாதுகாப்பு அதிகாரி ஐஸ் பேக்டரிகளில் ஆய்வு

3,March, 2015

imggallery

கடலூர்: கடலூர் முதுநகர் பகுதியில் உள்ள ஐஸ் பேக்டரிகளில் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ஆய்வு செய்தார். கடலூர் முதுநகர் பகுதியில் அதிகளவில் ஐஸ் பேக்டரிகள் உள்ளன. இங்கிருந்து ஐஸ் கட்டிகளை பெற்றுச் சென்று மீன்களை ஏற்றுமதி செய்ய பெட்டிகளில் அடைக்கவும், குளிர்பானங்களுக்குப்பயன்படுத்த கடைகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. கோடைகாலம் துவங்கிய நிலையில் குளிர்பான விற்பனை அதிகளவு இருக்கும். எனவே ஐஸ் பேக்டரிகளில் ஐஸ் தரமாக தயார் செய்யப்படுகிறதா என மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ராஜா, உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகுமார் ஆகியோர் கடலூர் முதுநகர் பகுதியில் உள்ள 10க்கும் மேற்பட்ட ஐஸ் பேக்டரிகளில் ஆய்வு செய்தனர்.

மேலும் ஐஸ் தயாரிக்கும் போது, போதிய அளவு தண்ணீரில் குளோரின் கலந்து தயாரிப்பது உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகளை கம்பெனிகள் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தினர்.

Categories: Cuddalore, DISTRICT-NEWS