Home > Cuddalore, DISTRICT-NEWS > மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ஆய்வு

மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ஆய்வு

6,March, 2015

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பில் உள்ள கடைகளில் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ராஜா ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது டீ கடைகளில் காகித கப்புகளை அப்புறப்படுத்தாமல் இருந்ததைப் பார்த்து கடை உரிமையாளர்களிடம் அகற்றும்படி அறிவுறுத்தினார். காலாவதியான குளிர்பானங்கள் மற்றும் உணவு பொருட்களை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். மேலும் 20 தினங்களுக்கு ஒருமுறை பொருட்களை வியாபாரிகளே ஆய்வு செய்ய வேண்டும் என ஆலோசனை வழங்கினார். புவனகிரி வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் குணசேகரன், சுப்ரமணியன் உடனிருந்தனர்.

Categories: Cuddalore, DISTRICT-NEWS