Home > Cuddalore, DISTRICT-NEWS > சத்துணவுக் கூடத்தில் உணவுப் பாதுகாப்பு அதிகாரி ஆய்வு-தினமணி செய்தி

சத்துணவுக் கூடத்தில் உணவுப் பாதுகாப்பு அதிகாரி ஆய்வு-தினமணி செய்தி

28,November, 2014

IMG_20141127_125956_1417146448962

பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் சத்துணவுக் கூடத்தை உணவுப் பாதுகாப்பு அதிகாரி வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.

கடலூர் மாவட்ட உணவுப் பாதுகாப்பு அதிகாரி ராஜா தலைமையில், உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் பண்ருட்டி நகரம் செந்தில்ராஜ்குமார், அண்ணாகிராமம் கந்தசாமி, குறிஞ்சிப்பாடி சுப்பிரமணியன் ஆகியோர் மாணவர்களுக்கு வழங்கப்பட இருந்த சத்துணவு மற்றும் முட்டைகளை ஆய்வு செய்தனர்.

ஆய்வுக்குப் பின்னர் ராஜா செய்தியாளர்களிடம் கூறியது: மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளை ஆய்வு செய்து வருகின்றோம்.

தலைமையாசிரியர் சோதித்த பின்னரே மாணவர்களுக்கு உணவு மற்றும் முட்டை வழங்க வேண்டும். பயன்பாட்டிற்கு முன்னர் முட்டையை தண்ணீரில் போட்டு அழுகிய முட்டைகளை அப்புறப்படுத்திய பின்னர் மாணவர்களுக்கு விநியோகிக்க வேண்டும் எனக் கூறினார். உதவித் தலைமையாசிரியை அமலி உடனிருந்தார்.

Categories: Cuddalore, DISTRICT-NEWS
  1. 28,November, 2014 at 9:39 am

    பல்லி சாம்பாரில் விழாமல் இருக்க வழி வகை சொல்ல வேண்டும்

  1. No trackbacks yet.
Comments are closed.