Home > Cuddalore, DISTRICT-NEWS > உணவு பாதுகாப்பு அதிகாரி ஆய்வு

உணவு பாதுகாப்பு அதிகாரி ஆய்வு

1,December, 2014

நெல்லிக்குப்பம்: மேல்பட்டாம்பாக்கம் கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் சோதனை செய்தார். நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கம் பகுதியில் உள்ள மளிகை, இனிப்பு மற்றும் பெட்டிக் கடைகளில் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ராஜா ஆய்வு செய்தார். காலாவதியான பொருட்களை விற்பனை செய்யக் கூடாது. இனிப்புகள் செய்ய அதிகம் கலர் பவுடர்களை பயன்படுத்தக் கூடாது. காய்ச்சிய எண்ணையை ஒரு முறைக்கு மேல் பயன்படுத்தக் கூடாது. பொருட்களை ஈ மொய்க்காமல் மூடி வைக்க வேண்டும். பாக்கெட்டுகளில் உற்பத்தி நிறுவனங்களின் பெயரும் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதிகள் கட்டாயம் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டது. வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கந்தசாமி, சுப்ரமணியன் உடனிருந்தனர்.

Categories: Cuddalore, DISTRICT-NEWS