Home > Cuddalore, DISTRICT-NEWS > உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு

உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு

9,December, 2014
 

பண்ருட்டி, டிச. 8:

அண்ணாகிராமம் உணவு பாதுகாப்பு அலுவலர் கந்தசாமி, கடலூர் ரவிச்சந்திரன், புவனகிரி குணசேகரன், சுகாதார ஆய்வாளர் ரமேஷ் ஆகியோர் கொண்ட குழுவினர் சாத்திப்பட்டில் உள்ள தேனீர் கடைகள், ஓட்டல்கள், ரைஸ் மில்கள், முந்திரி பருப்பு பதப்படுத்தும் தொழிற் கூடங்கள் ஆகிய இடங்களில் ஆய்வு செய்தனர். இதில் மளிகை கடைகளில் இருந்த காலாவதியான குளிர்பானங்கள், பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.

மேலும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, உணவு பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது என்ற நோட்டீஸ் வழங்கப்பட்டன. மளிகை கடை ஒன்றில் உப்பு மாதிரி எடுத்து ஆய்வு கூடத்திற்கு அனுப்பப்பட்டது.

Categories: Cuddalore, DISTRICT-NEWS
  1. 9,December, 2014 at 12:31 pm

    உரிமையாளர்களுக்கு பயிற்சி வழங்கி மேலும் நடைபெறாத வண்ணம் பார்த்துக்கொள்ள அறிவுறுத்த வேண்டும்

  1. No trackbacks yet.
Comments are closed.