Home > DISTRICT-NEWS, Virudhunagar > கந்தகம் பயன்படுத்தி புகைமூட்டம்: மல்லி ஆலைக்கு சீல் வைப்பு

கந்தகம் பயன்படுத்தி புகைமூட்டம்: மல்லி ஆலைக்கு சீல் வைப்பு

19,December, 2014

விருதுநகர், டிச. 19–

விருதுநகர் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி டாக்டர் கவிக்குமார் தலைமையிலான குழு, பெரிய வாகைக்குளம் பகுதியில் மல்லி ஆலைகளில் அதிரடி சோதனை மேற்கொண்டது. அப்போது புகழ்ராஜ் என்பவரது ஆலையில் சோதனை நடத்தியபோது, அங்கு கந்தகம் பயன்படுத்தி புகைமூட்டம் போட்டு, மல்லியை பாடம் செய்வது தெரியவந்தது.

இது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்பதால் இது குறித்து அங்கு விசாரணை நடத்தப்பட்டது.

தொடர்ந்து ரூ.9 லட்சம் மதிப்பிலான 600 மூடை மல்லியுடன் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் மல்லி மாதிரி எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதன் முடிவுகள் வந்த பின்னர்தான் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு செய்யப்படும்.