Home > Dindigul, DISTRICT-NEWS > உணவு பாதுகாப்பு அலுவலர் ஆய்வு

உணவு பாதுகாப்பு அலுவலர் ஆய்வு

6,March, 2015

திண்டிவனம்: திண்டிவனம் பகுதி ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். திண்டிவனம் பகுதியில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் ஆறுமுகம் தலைமையில், அலுவலர்கள் முருகன், மோகன், சாமரேசன், பாரதி பன்னீர்செல்வம் ஆகியோர் ஓட்டல்கள், மளிகை கடைகளில் ஆய்வு செய்தனர். மயிலம் ரோட்டில் டீ கடையில் கலப்பட டீ தூள் பயன்படுத்தியது தெரியவந்தது. மேம்பாலம் அருகே உள்ள ஓட்டல்களில் சுகாதாரமற்ற முறையில் உணவுகள் தயாரித்தது தெரிந்தது. சுகாதாரமான முறையில் உணவுகள் வழங்க ஊழியர்களிடம் அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

Categories: Dindigul, DISTRICT-NEWS