Home > DISTRICT-NEWS, Tirunelveli > அம்பை பகுதியில் 500 லிட்டர் பாக்கெட் பால் பறிமுதல்

அம்பை பகுதியில் 500 லிட்டர் பாக்கெட் பால் பறிமுதல்

20,April, 2016

அம்பாசமுத்திரம் பகுதியில் பாதுகாப்பற்ற முறையில் கொண்டு செல்லப்பட்ட சுமார் 500 லிட்டர் பாக்கெட் பால் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.

அம்பாசமுத்திரம் வட்டார உணவு பாதுகாப்பு அதிகாரி நாகசுப்பிரமணியன், அகஸ்தியர்பட்டி பொன்நகர் பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த பால் வண்டியை நிறுத்தி சோதனையிட்டபோது, பால் வண்டியில் உணவுப் பொருள்கள் கொண்டு செல்வதற்கான உரிமம் மற்றும் பால் தயாரிப்பிற்கான உணவுப் பாதுகாப்புத் துறை உரிமம் போன்ற முறையான ஆவணங்கள் இல்லையாம். மேலும், பால் பதப்படுத்தப்பட்ட நிலையில் இல்லையாம். இதையடுத்து பால் வண்டியில் இருந்த சுமார் 500 லிட்டர் பாலை அவர் பறிமுதல் செய்து அழித்தார்.

Categories: DISTRICT-NEWS, Tirunelveli