Home > NEWS > வளவனூர் பகுதியில் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் திடீர் சோதனை

வளவனூர் பகுதியில் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் திடீர் சோதனை

4,December, 2014

விழுப்புரம் அருகே வளவனூர் பகுதியில் உணவுப் பாதுகாப்புத் துறையினர் பல்வேறு இடங்களில் திடீர் சோதனை நடத்தி, காலாவதியான உணவுப் பொருள்கள், புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து அழித்தனர்.

வளவனூர் பகுதியில் மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர் ஆறுமுகம் மற்றும் அதிகாரிகள் வணிக நிறுவனங்களில் திடீர் சோதனை நடத்தினர். இச் சோதனையின்போது பல்வேறு கடைகளில் தயாரிப்பு தேதி குறிப்பிடப்படாத 50, பாதாம் பால் புகையிலைப் பொருள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து அழித்தனர்.

அதேபோல ஒரே கடையில் இருந்து கலாவாதியான 100 குளிர்பான பாட்டில்களை பறிமுதல் செய்து அவைகளை அக் கடையின் முன்பே அழித்தனர்.

வளவனூர் பகுதி முழுவதும் இதுபோல பல இடங்களில் சோதனை நடத்தி காலாவதியான உணவுப் பொருள்கள், புகையிலைப் பொருள்களை அழித்தனர்.

இச்சோதனையில் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் கோலியனூர் முருகன், செஞ்சி கதிரவன், விக்கிரவாண்டி ராஜ்குமார், திருக்கோவிலூர் ஜெயராஜ், கண்டமங்கலம் தர்மர் உள்ளிட்ட

அதிகாரிகள் பங்கேற்றனர்.

Categories: NEWS
  1. 4,December, 2014 at 5:11 pm

    பள்ளி விடுதிகள் , சத்துணவு மையங்களுக்கு முக்கியத்துவம் தேவை

  1. No trackbacks yet.
Comments are closed.