Home > Chennai, DISTRICT-NEWS > சுகாதாரமற்ற 1500 கிலோ இறைச்சி பறிமுதல்

சுகாதாரமற்ற 1500 கிலோ இறைச்சி பறிமுதல்

12,December, 2014

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

பெரம்பூர்-பெரியமேடு பகுதியில் சுகாதாரமற்ற முறையில் விற்கப்பட்ட 1500 கிலோ இறைச்சியை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.
பெரியமேடு பகுதியில் சுகாதாரற்ற முறையில்  இறைச்சி விற்பனை செய்யப்பட்டு வருவதாக புகார்கள் வந்தன. இதையடுத்து தமிழ்நாடு உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் லட்சுமி நாராயணன் தலைமையில் 4க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இன்று காலை 6 மணியளவில் அப்பகுதிக்கு சென்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் வைக்கப்பட்டு இருந்த 1500 கிலோ  இறைச்சியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இறைச்சிகள் வேலூர் அடுத்த பேரணாம்பட்டு பகுதியில் இருந்து மினி வேன் மூலமாக பெரியமேடு பகுதிக்கு கொண்டு வந்து பாக்கெட் போட்டு சென்னையில் பல்வேறு இடங்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சிகளை அதிகாரிகள் கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் கொட்டி அழித்தனர்.

Categories: Chennai, DISTRICT-NEWS