Home > Cuddalore, DISTRICT-NEWS > உணவு பாதுகாப்பு அதிகாரி ஆய்வு

உணவு பாதுகாப்பு அதிகாரி ஆய்வு

3,April, 2015

கடலூர்: கடலூர் பஸ் நிலையம் பகுதியில் உள்ள கடைகளில் குளிர்பானங்களை மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ஆய்வு செய்தார். கடலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ராஜா, வட்டார உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நல்லதம்பி, நந்தகுமார், சுப்ரமணியன் ஆகியோர் நேற்று கடலூரில் குளிர்பான குடோன் மற்றும் பஸ் நிலையத்தில் உள்ள கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த குளிர்பானங்களை ஆய்வு செய்தனர். இதில் காலாவதி தேதி குறிப்பிடாமல் இருந்த 300 பாதாம் பாட்டில்கள், 50 மோர் பாக்கெட்டுகள் மற்றும் 25 ஆரஞ்சு பாக்கெட் குளிர் பானங்களைக் கைப்பற்றினர். மேலும், குளிர்பான பாட்டில்களை வெயிலில் வைத்தால் ரசாயண மாற்றம் ஏற்பட்டு, <குடிப்பவர்களுக்கு உடல் நிலை பாதிக்கப்படும் எனவும், அதனால் குளிர்பான பாட்டில்களை குளிர்சாதன பெட்டியில் வைத்து விற்பனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.

Categories: Cuddalore, DISTRICT-NEWS