Home > Dindigul, DISTRICT-NEWS > பாதுகாப்பற்ற உணவு பொருட்கள் விற்பனை செய்ய தடை

பாதுகாப்பற்ற உணவு பொருட்கள் விற்பனை செய்ய தடை

28,August, 2015

திண்டுக்கல்: பாதுகாப்பற்ற உணவு பொருட்கள் விற்பனைக்கு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை தடை விதித்துள்ளது.அதன் மாவட்ட நியமன அலுவலர் சாம் இளங்கோ கூறியதாவது: உணவு பாதுகாப்பு தர சட்டம் 2006 மற்றும் விதிகள் 2011 பிரிவு 26 ன் படி பாதுகாப்பற்ற, தரமற்ற உணவை உற்பத்தி செய்யவும், விற்பனை செய்யவும் கூடாது. உரிமத்தில் கட்டுப்படாத, தவறான தகவல் முத்திரைகளுடன் கூடிய, மத்திய, மாநில அரசால் தடை செய்யப்பட்ட உணவுப்பொருட்களை உற்பத்தி செய்யவும், விற்பனை செய்யவும் கூடாது.

தொற்றுநோய், ஒட்டு நோயுடையோரை பணியமர்த்த கூடாது. உணவு பொருளின் தன்மை பற்றி உத்திரவாதம் அளித்து விற்பனை செய்ய வேண்டும். இதில் விற்பனையாளர்கள் வழங்கும் ரசீது, பற்று குறிப்பு, விலைப்பட்டியல் ஆகியவை உத்திரவாதமாக கருதப்படும். உணவு பாதுகாப்பு அமைப்பினர் சந்தேகப்படும் உணவு பொருளை சந்தைப்படுத்த கூடாது, என்றார்.

Categories: Dindigul, DISTRICT-NEWS