Home > Cuddalore, DISTRICT-NEWS > உணவு பாதுகாப்பு அதிகாரி ஆய்வு

உணவு பாதுகாப்பு அதிகாரி ஆய்வு

29,August, 2015

29_08_2015_105_007_002

கடலுார் : கடலுார் பஸ் நிலையம் அருகே உள்ள ஓட்டலில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

கடலுார் பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு ஓட்டலில் உணவு தரமில்லாமலும், சுவை இல்லாமலும் இருப்பதாக மாவட்ட உணவு பாதுகாப்புத் துறைக்கு புகார் வந்தது. அதன்பேரில், மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ராஜா தலைமையில், நகர உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கடலுார் நந்தகுமார், பண்ருட்டி செந்தில் ராஜ்குமார் ஆகியோர், நேற்று சம்பந்தப்பட்ட ஓட்டலுக்குச் சென்று உணவு தரமாகவும், சுவையாகவும் உள்ளதா என அதிரடி சோதனை மேற்கொண்டனர். சமையல் கூடங்கள் துாய்மையாகவும், உணவு தரமாகவும், சுவையாகவும் இருக்க வேண்டும். உணவு பரிமாறுபவர்கள் கையுறை, தொப்பி அணிந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தினார். இல்லையெனில் நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரித்தார்.

Categories: Cuddalore, DISTRICT-NEWS