Home > DISTRICT-NEWS, Krishnagiri > கிருஷ்ணகிரியில் காலாவதியான உணவுப் பொருட்கள் பறிமுதல் : மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை

கிருஷ்ணகிரியில் காலாவதியான உணவுப் பொருட்கள் பறிமுதல் : மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை

23,April, 2015

கிருஷ்ணகிரியில், மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்கையின்போது ஒரு லட்சம் ரூபாய் மதிப்புடைய காலாவதியான உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கிருஷ்ணகிரியில் பேருந்து நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் இடங்களில் உள்ள கடைகளில் காலாவதியான திண்பண்டங்கள், குளிர்பானங்கள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியருக்கு புகார் வந்தது. இதனையடுத்து, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பேருந்து நிலையத்தில் உள்ள பல்வேறு கடைகளில் சோதனை நடத்தினர். அப்போது, காலாவதியான ஒரு லட்சம் ரூபாய் மதிப்புடைய திண்பண்டங்கள், குளிர்பானங்கள் போன்றவற்றை பறிமுதல் செய்யப்பட்டு, அவை தீயிட்டு அழிக்கப்பட்டன.

Categories: DISTRICT-NEWS, Krishnagiri