Home > Cuddalore, DISTRICT-NEWS > உணவு பாதுகாப்பு அதிகாரி ஆய்வு

உணவு பாதுகாப்பு அதிகாரி ஆய்வு

22,April, 2015

கடலூர்; கடலூரில் பதநீர் பாக்கெட்டுகளை மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ஆய்வு செய்தார். கடலூர் பீச் ரோட்டில் உள்ள பனைபொருள் பயிற்சி நிலையத்தில் தயாரிக்கப்படும் பதநீர், பனைவெல்லம் ஆகியவை சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படுகிறதா என மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ராஜா ஆய்வு நடத்தினார். பதநீர் பாக்கெட்டுகளில் தயாரிப்பு தேதி, காலாவதியாகும் தேதியை அவசியம் அச்சிடவேண்டும் என எச்சரிக்கை செய்தார். இந்த ஆய்வின் போது வட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நல்லத்தம்பி, சுப்ரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Categories: Cuddalore, DISTRICT-NEWS