Home > Cuddalore, DISTRICT-NEWS > உணவு பாதுகாப்பு அதிகாரி சோதனை

உணவு பாதுகாப்பு அதிகாரி சோதனை

27,February, 2015

27_02_2015_008_003_001

விருத்தாசலம்: விருத்தாசலம் நகரில் உள்ள டாஸ்மாக் பார்களில், மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ராஜா திடீர் சோதனை மேற்கொண்டார். அப்போது, டாஸ்மாக் பார்களில் சிதறிக் கிடந்த பயன்படுத்திய பிளாஸ்டிக் கப், வாட்டர் பாக்கெட்டுகளை முறையாக சேகரித்து, அப்புறப்படுத்தவும், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும், சுகாதாரமற்ற முறையில் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் பார் உரிமையாளர்களை எச்சரித்தார். தொடர்ந்து, பஸ் நிலையம் அருகிலுள்ள ஓட்டல்களில் ஆய்வு செய்த அவர், உணவுப் பொருட்கள் மூடிய நிலையில் பாதுகாப்பாக வைக்க அறிவுறுத்தினார். பாஸ்ட் புட் கடையில் திறந்த வெளியில் தொங்க விடப்பட்டிருந்த சிக்கன் துண்டுகளை பறிமுதல் செய்தார். பலகார கடையில் சுகாதாரமின்றி பயன்படுத்திய சமையல் எண்ணையை கீழே கொட்டுமாறு அறிவுறுத்தி, சுத்தமில்லாத பொருட்கள் பறிமுதல் செய்தார். பாலக்கரை ரவுண்டானா அருகே உள்ள டீ கடையில் தரமில்லாத டீ தூள் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தார். ஆய்வின்போது, விருத்தாசலம் நகர உணவு பாதுகாப்பு அதிகாரி நல்லதம்பி, குறிஞ்சிப்பாடி வட்டார அதிகாரி சுப்ரமணியன் ஆகியோர் உடனிருந்தனர்.

Categories: Cuddalore, DISTRICT-NEWS