Home > Cuddalore, DISTRICT-NEWS > உணவு பாதுகாப்பு அதிகாரி சோதனை 100 கிலோ டீ தூள் பறிமுதல்

உணவு பாதுகாப்பு அதிகாரி சோதனை 100 கிலோ டீ தூள் பறிமுதல்

19,February, 2015

teaகடலூர்: கடலூர் முதுநகர் பகுதியில் போலி டீ தூள் பாக்கெட்டுகளை மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வின் போது பறிமுதல் செய்தனர். கடலூர் முதுநகர் பகுதிகளில் போலி டீ தூள் பயன்படுத்தப்படுவதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் கடலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ராஜா, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நத்தகுமார், சுப்ரமணியன், கொளஞ்சியார் உள்ளிட்டோர் கடலூர் முதுநகர் பகுதியில் சோதனை செய்தனர். அப்போது ஒரு வீட்டில் எந்தவித பதிவு எண்ணும் இல்லாத பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த டீ தூள் பாக்கெட்டுகள் இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அங்கிருந்த 100 கிலோ எடை கொண்ட பாக்கெட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட டீ தூள் மாதிரிகள் ஆய்வு முடிவில் கலப்பட டீ தூளாக இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரி ராஜா தெரிவித்தார்.

Categories: Cuddalore, DISTRICT-NEWS