Home > DISTRICT-NEWS, Thoothukudi > விளாத்திகுளம் பகுதியில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு

விளாத்திகுளம் பகுதியில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு

20,February, 2015

விளாத்திகுளம், : தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் விளாத்தி குளம் பகுதியில் உள்ள கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் ஜெகதீஷ் சந்திரபோஸ் தலைமையில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் சிவபாலன், பொன்னுராஜ், மாரிச்சாமி ஆகியோர் ஆய்வு நடத்தினர்.
விளாத்திகுளம் பஜாரில் உள்ள குளிர்பான கடை, பழக்கடை, டீக்கடை உள் ளிட்ட நூற்றுக்கும் மேற் பட்ட கடைகளில் சோதனை செய்தனர். இதில் சுமார் ரூ.5 ஆயிரம் மதிப்பிலான காலாவதி யான குளிர்பானங்கள் மற்றும் உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், பஸ் ஸ்டாண்ட் உட்புறம் உள்ள அசுத்தம் நிறைந்த கோழிக்கடைகளை ஒரு நாளுக்குள் முழுமை யாக சுத்தம் செய்ய உத்தரவிடப்பட்டது. 20க்கும் மேற்பட்ட கடைகளில் உறுதிமொழி பெறப்பட்டு கடைகளில் வைக்கப்படும் குடிநீரை மூடி வைக்க வேண்டும். வாரம் ஒரு முறை கடையை சுத்தம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டன.

Categories: DISTRICT-NEWS, Thoothukudi