Home > NEWS > விழிப்புணர்வு பேரணி

விழிப்புணர்வு பேரணி

28,February, 2015

வாடிப்பட்டி. : தமிழ் நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை, பரவை மீனாட்சிமில்ஸ் மற்றும் மங்கையர்கரசி கலைக்கல்லூரி சார்பில் சமயநல்லூரில் பறவைக்காய்ச்சல், பன்றிக்காய்ச்சல் மற்றும் டெங்குகாய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு உணவுப்பாதுகாப்பு துறை மதுரை மாவட்ட நியமன அலுவலர் சுகுணா தலைமை தாங்கி னார். சமயநல்லூர் டிஎஸ்பி வேல்முருகன், சமயநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் சுசித்ரா ஆகியோர் முன் னிலை வகித்தனர்,பேரணி யை மதுரை மாவட்ட கூடுதல் எஸ்.பி.ஜான் கொடியசைத்து துவக்கிவைத்தார். பின்னர் மாணவர்களும் அதிகாரிகளும் பறவை காய்ச்சல், டெங்கு காய்ச்சல்  தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

Categories: NEWS